(க.கிஷாந்தன்)
நபரொருவரின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (30) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமச்சந்திர இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள் இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் வைத்து 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சோமசிறி என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கொலை செய்துள்ளனர்.
1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய அசோக பத்திரண மற்றும் விசோகுமாரி விக்கிரமசிங்க ஆகிய இரண்டு பேருக்கும் 6 மாத கடுங்காவல் சிறை தண்டனையுடன், மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட சோமசிறி என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட விசோகுமாரி விக்கிரமசிங்கவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM