(செ.தேன்மொழி)
ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார்.
ஐ.தே.க. அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து செயற்படபோவதாக எதிர்தரப்பில் பலரும் தெரிவித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிக் கொண்டு தனித்து ஆட்சி அமைப்பதற்கே தயாராகி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப் போவதாக கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை . நாங்கள் ஒரு போதும் அவ்வாறான தீர்மானம் எடுத்ததில்லை.
கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பொதுத் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்கட்சி என்ற வகையில் அவர்களது செயற்பாடு திருப்திகரமாக இருக்கும் போது ஆதரிப்பதுடன் , அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக விமர்சனங்களையும் தெரிவிப்போம்.
இந்நிலையில் அரசாங்கத்தின் நன்மை தரும் ஒரு செயற்பாட்டுக்கு நாம் ஆதரவளித்தால் , அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுவதாக அர்த்தமில்லை என்றும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM