(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை ஆதரவினை பெற்று தனித்து பலமான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்போம். என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான உள்ளக பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு மாததிரம் முக்கியத்துவம் கொடுத்தார் . நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூற வேண்டும். கட்சியை பிளவுப்படுத்தி தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்தமையினால் இரு தரப்பினருக்குமிடையில் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.
பொதுத்தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியினர் பொதுஜன பெரமுனவுடன் தேசிய அரசாங்கத்தை அமைக்க உள்ளாதால் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறார் . என்று சஜித் அணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு வெறுப்புக்குரியது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமாக ஆதரவை பெற்று பிற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனித்து பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப் பெற்ற மக்களாணைக்கு அதிகமாகவே பொதுத்தேர்தலிலும் அமோக ஆதரவு கிடைக்கப் பெறும்.
பொதுத்தேர்தலின் ஊடாக மக்கள் ஐக்கிய தேசிய கட்சியையும்,ஐக்கிய மக்கள் சக்தியையும் முழுமையாக புறக்கணிப்பார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் பலர் பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு இனியொருபோதும் மக்களாணையினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க முடியாது. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM