ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி தேவாலய வீதியிலுள்ள மர ஆலை மற்றும் அருகிலிருந்த வீடு என்பன தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் இன்று மாலை 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மர ஆலையில் சேரும் தூசிகளை ஒன்று சேர்த்தது தீ வைத்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் காத்தான்குடி பொலிசாருடன் இணைந்து தீ ஏனைய இடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் மர ஆலை வீடு என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
சுமார் 30 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM