(எம்.ஆர்.எம்.வஸீம்)
நாட்டின் மனித உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் ஆணையாளர் தெரிவித்திருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். அரசாங்கம் இதுதொடர்பில் உடனடி தீர்மானங்கள் எடுக்காமல் இருப்பதானது சர்வதேசத்தின் நம்பிக்கையை இழக்கநேரிடும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
நவ சமசமாஜ கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதத்தின்போது அதன் ஆணையாளர் செய்யித் அல் அல்ஹுசைன் தெரிவித்துள்ள விடயங்கள்
குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் சைன், இலங்கை அரசாங்கம் நாட்டில் சில முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டாலும் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லையென தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் ஆணையாளரின் இந்த குற்றச்சாட்டை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனெனில் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒருவருடம் கடந்தும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வை இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. அத்துடன் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, சிவராம் போன்றவர்களின் கொலை தொடர்பில் விசாரணைகள் முடிவடையவில்லை.
மேலும் வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப்பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அவர்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டு செல்கின்றது.
எனவே அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வாக்குறுதி அளித்த விடயங்களை அப்படியே நிறைவேற்றுவதன் மூலமே சர்வதேசத்தின் உதவியை தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM