லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 3

06 Jun, 2020 | 04:07 PM
image

(நா.தனுஜா)

தமது நாட்டிற்கு மீளத்திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு லெபனான் அரசாங்கம் உடன்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்குத் திரும்ப அழைத்துச்செல்வதில் பின்பற்றப்படும் அணுகுமுறைகளின் பிரகாரம் லெபனானுக்கான இலங்கைத்தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன லெபனான் தொழிலாளர் விவகார அமைச்சர் மாடமே லமியா யாமினுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.

இவ்விருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவல், புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள், லெபனானின் பொருளாதார நெருக்கடி, ஊழியர்களுக்கு ஊதியக்கொடுப்பனவு இடைநிறுத்தம், புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் சுகாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது மீண்டும் நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது குறித்து தூதுவர் தொழிலாளர் விவகார அமைச்சரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அதேதினம், நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்கு வழமையாகப் பெறப்படும் 100 அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக 20 அமெரிக்க டொலர்களை அறவிடுமாறு அமைச்சர் தூதரகத்திற்கு அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 4 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின்படி லெபனானில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06