(செ.தேன்மொழி)
கொவிட்- 19 வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்கம் சட்டத்திற்கமைய அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 10 ஆயிரத்து 892 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கடந்த மார்ச்மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில்ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதிக்குமாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக நேற்று வெள்ளிக்கிழமை காலை ஆறு மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை 230 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன்இ 96 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
அதற்கமைய ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக இதுவரையில் 70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து 952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM