(நா.தனுஜா)
நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில், பொதுப்போக்குவரத்து சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பெருமளவு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை சீனா நன்கொடையா வழங்கியிருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (8) வழமைக்குத் திரும்புகின்றது. இதன்போது பொதுப்போக்குவரத்து சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் போக்குவரத்து அமைச்சினால் முன்னெடுக்கட்டு வருகின்றன.
அந்தவகையில் நாட்டின் பொதுப்போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக சீன தேசிய உபகரண இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கூட்டுத்தாபனம் 1000 சுயபாதுகாப்பு அங்கிகள், 60 000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள், 15 000 கே.என் 95 முகக்கவசங்கள் மற்றும் 500 கையுறைகளை இலங்கைப் போக்குவரத்து அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM