விசேட தேவையுடைய சிறுவனின் விவகாரத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளை மறைப்பதாக அமைந்துள்ளது - சஜித்

Published By: Digital Desk 3

05 Jun, 2020 | 07:47 PM
image

(நா.தனுஜா)

அளுத்கம பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம்  சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக செயற்பட்ட பொலிஸாரின் செயற்பாடுகளை மறைப்பதாக  அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.

அளுத்கம பகுதியில் கடந்த 25 ஆம் திகதி விசேட தேவையுடைய தாரிக் அஹமட் என்ற சிறுவன் பொலிஸ் அதிகாரிகள் சிலரால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சி.சி.டி.வி காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து கட்சிபேதமின்றி  அரசியல்வாதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் சஜித் பிரேமதாஸ கூறியிருப்பதாவது:

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிறுவனை அச்சுறுத்தி, உடல் ரீதியாகவும் காயமேற்படுத்திய பொலிஸாரின் செயல் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படவோஇ மன்னிக்கப்படவோ முடியாததாகும் என்பதோடு இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

இச்சம்பவம் சட்டம்இ ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக செயற்பட்ட பொலிஸாரின் செயற்பாடுகளை மறைப்பதாக அமைந்துள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06