பிஜித் தீவில் கடைசியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரும் பூரண குணமடைந்த நிலையில், அத்தீவில் கொரோனா தொற்று இல்லையென நேற்று அறிவித்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் மகத்தான வெற்றியினை பிஜி ஈட்டியுள்ளது.
கடைசியாக அறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி பூரண குணமடைந்த நிலையில், நாட்டின் வைரஸ் இல்லாத அந்தஸ்த்திற்கு " பிரார்த்தனைகளுக்கான பலன், கடின உழைப்பு மற்றும் அறிவியலின் உறுதிப்படுத்தல்" ஆகியவையே காரணம் என பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா தெரிவித்துள்ளார்.
சுமார் 930,000 சனத் தொகையை கொண்ட பிஜியில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
இந்நிலையில் இதுவரை 18 பேர் கொவிட்19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், கடந்த 45 நாட்களில் நாட்டில் புதிய தொற்று அல்லது இறப்பு வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
உலகளவில் பொரோனா வைரஸ் தொற்றினால் 66 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 391,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM