கால்பந்தாட்ட அரங்கின் ‘நம்பர்-1’ வீரர் ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் லயனொல் மெஸ்ஸி என போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
கால்பந்தாட்ட உலகில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவர்களுமே இந்தக்கால தலைமுறையின் சிறந்த வீரர்கள் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதில் கால்பந்தாட்ட அரங்கின் அதிஉச்ச விருதாக கருதப்படும் பலோன் டி ஆர் விருதை மெஸ்ஸி 6 தடவைகளும், ரொனால்டோ 5 தடவைகளும் கைப்பற்றியுள்ளனர்.
தற்போது விளையாடும் கால்பந்தாட்ட வீரர்கள் குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில்,
“கால்பந்தாட்ட அரங்கில் தற்போதுள்ள விளையாடும் வீரர்களில் லயனொல் மெஸ்ஸி ‘நம்பர்-1’ வீரர் ஆவார். இதில் எதுவித சந்தேகமும் இல்லை. இவரைப் போன்று இன்னுமொரு வீரரைக் காண்பதற்கு இன்னமும் 20,30 ஆண்டுகள் எடுக்கும். மெஸ்ஸியைத் தவிர, எகிப்தின் மொஹமட் சாலா, பெல்ஜியத்தின் ஈடுன் ஹசார்ட், பிரேஸிலின் நெய்மர், பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே ஆகிய ஐவரும் எனது முதல் ஐந்து வீரர்களாவர்.
இதில் எம்பாப்வே என்னைப் போலவே விளையாடுவாதாக பலர் கூறிவருகின்றனர். வேகம், பந்தை ‘பினிஷிங்’ செய்யும் திறன், இரு கால்களாலும் பந்தை அடிக்கும் ஆற்றல் உண்மையில் வியக்கத்தக்கதுதான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
எனினும், பொவாக வெவ்வேறு தலைமுறை வீரர்களை எவருடனும் ஒப்பிடுவதை விருப்பமில்லை. ஏனெனில், இருவரும் விளையாடிய சூழ்நிலைகள் வெவ்வேறானதாக இருக்கும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM