உழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்

04 Jun, 2020 | 12:51 PM
image

கிளிநொச்சி - முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

கிளிநொச்சி- புதுமுறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்தவர் சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக்கொண்டு   கோழி கூட்டின் மீது மோதியுள்ளது. இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இறந்துள்ளன.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில் மட்காட்டில் இருந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர். 

இதன்போது மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி கீழே விழுந்து சில்லுக்குள் சிக்கியுள்ளார். 

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலியை உடைத்துக்கொண்டு அருகில் இருந்த  வீட்டு வளவுக்குள் நுழைந்தது அங்கிருந்த கோழி கூட்டின் மீது மோதி நின்றுள்ளது. இதனால்  முப்பது கோழிகளும் உயிரிழந்துள்ளன.

உழவு இயந்திரத்தின் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப்பற்றினர். 

மேலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் உயிரிழந்தவர் 8 ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த நல்லதம்பி யோகேஸ்வரன் (வயது41) என்ற இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இதேபோல் சாரதி மற்றும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், தப்பி ஓடிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31