கிணற்றிலிருந்து 21 வயதான யுவதியின் சடலம் புதன்கிழமை பகல் (03.06.2020) மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் கடந்த 31 ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போன யுவதியின் சடலம் என உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இந்த யுவதி ஏழாவது பிள்ளை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அந்த யுவதி வசித்த வீட்டு வளவிலுள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அந்தக் கிணற்றைப் பார்வையிட்டபோதே மேற்படி சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு மீட்கப்பட்ட சலத்தைப் பிரேத பரிசோதணைக்காக மாஞ்சோலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM