கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

03 Jun, 2020 | 07:52 PM
image

கிணற்றிலிருந்து 21 வயதான யுவதியின் சடலம்  புதன்கிழமை பகல் (03.06.2020) மீட்கப்பட்டதாக புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு – விசுவமடு மாணிக்கபுரம் கிராமத்தில் அம்மன் கோயில் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் பாவனையிலுள்ள கிணற்றிலிருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் கடந்த 31 ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போன யுவதியின் சடலம் என உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

ஏழு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இந்த யுவதி ஏழாவது பிள்ளை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அந்த யுவதி வசித்த வீட்டு வளவிலுள்ள கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அந்தக் கிணற்றைப் பார்வையிட்டபோதே மேற்படி சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதோடு மீட்கப்பட்ட சலத்தைப் பிரேத பரிசோதணைக்காக மாஞ்சோலை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38