கல்முனை வடக்கு உப பிரதேச செயலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயம் தொடர்பாக வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி தர்மலிங்கம் கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை(2) வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலயம் சார்பாக பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்ததுடன் சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித், மதிவதணன், ஆகியோர் ஆதரவாக ஆஜராகியிருந்தனர்
கடந்த 2018ம் ஆண்டு கல்முனை மாநகர சபை முதல்வர் சார்பில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் இவ்வாலய வழக்கில் நீண்டகாலமாக பல்வேறு வழக்கு தவணைகளில் பிரதான சட்டத்தரணி நா. சிவரஞ்சித்துடன் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, மதிவதணன் ஆகியோர் ஆஜராயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM