(செ.தேன்மொழி)
திவுலப்பிட்டி பகுதியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவுலப்பிட்டி - பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று செவ்வாய்கிழமை காலை பொலிஸ் போதைப்பொருள் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
மோட்டார் சைக்கிளில் வந்துள்ள சந்தேகநபர்களை சோதனைக்குட்படுத்தியுள்ள போதைப் பொருள் பிரிவினர் அவர்களிடமிருந்து ஒருகிலோ 496 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹெரோயினை கைப்பற்றியுள்ளனர்.
கிம்புலாபிட்டி மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதியைச் சேர்ந்த 22, 42 ஆகிய வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM