ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உரும்பிராய் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 60 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM