3 நாட்களில் 21 ஆயிரம் கையெழுத்திட்டேன் - எதற்காக என விளக்குகிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

02 Jun, 2020 | 07:30 AM
image

மூன்று நாள்களின் பின்னர் எனது கை விரலில் பேனையின் தழும்பு பதியும் அளவுக்கு நான் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்றையதினம் (01.06.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை, சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வரவழைப்பதற்காக, சட்ட மா அதிபரால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களில், அரசாங்கத்தின் தலைவன் என்ற ரீதியில், மூன்று நாள்களில் 21 ஆயிரம் கையெழுத்துகளையிட நேரிட்டது.

மஹேந்திரனை, மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் அரசாங்கத்தை அமைத்து இரண்டு வாரங்களே ஆகியிருந்த நிலைமையில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் விரிசலைக் கொண்டுவந்துவிடும் என்ற காரணத்தால், பிரதமரின் சிபாரிசுக்கு தலைசாய்த்தேன். இதில் எனது விருப்பு இன்றியே இந்நியமனம் வழங்கப்பட்டது.

2019இல், சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றுக்குத் தான் சென்றிருந்த போது, அந்நாட்டுப் பிரதமரைத் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அர்ஜுன மஹேந்திரனை எம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58