பொலிஸார் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் விசேட தேவையுடையவர் முறைப்பாடு 

Published By: Digital Desk 4

01 Jun, 2020 | 07:08 PM
image

விசேட தேவையுடையவரை பொலிசார் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைதுசெய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.கிரீமலை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து அவ்விடத்திற்கு விசாரணைக்காக  சென்றிருந்த காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர்  தலைமையிலான பொலிஸ் குழுவினர் மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய முயன்ற போது , உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

வாள் வெட்டுக்கு இலக்கான உப பொலிஸ் பரிசோதகரை ஏனைய பொலிசார் அங்கிருந்து மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதேவேளை சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கும் அறிவித்தனர். 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேலதிக பொலிசார், உப பொலிஸ் பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் விசேட தேவையுடையவரை கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் மல்லாகம் நீதவானின் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்திருந்தார். 

இந்நிலையில், அன்றைய தினம் இரவு தம்மை கைது செய்த பொலிசார் தன்னை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தடியால் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் , சம்பவத்துடன் தொடர்பில்லாத தன்னை பொய் குற்றசாட்டு சுமத்தி பொலிசார் கைதுசெய்து தாக்கி சித்திரவதை புரிந்ததாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை கையளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22