(இரா. செல்வராஜா)
பாடசாலைகளை திறந்து காலை, மாலை என இருநேர வகுப்புக்களை நடத்துவது தொடர்பான சாதக, பாதக நிலைமை குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.
மாணவர்களை ஒரு மீற்றர் இடைவெளியில் அமர செய்யும் பட்சத்தில் வகுப்பறையில் ஏற்படும் இட நெருக்கடியை தீர்ப்பது தொடர்பில் ஆராய்வதாக கல்வியமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பல பாடசாலைகளில் வகுப்பறையில் நெருக்கடி நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களை ஒரு மீற்றர் இடைவெளியில் அமர செய்வதால் வகுப்பறையில் இடப்பற்றாக்குறை ஏற்படும்.
அத்துடன் பாடசாலைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்க்க முடியாமல் போகும்.
நாட்டில் உள்ள கிராம புற பாடசாலைகளில் போதியளவு நீர், மலசலகூட வசதி இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய 32 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் அதிகாரி தெரிவித்தார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமும், சாதாரண தர பரீட்சை டிசெம்பர் மாதம் நடைப்பெறவிருப்பதால் முதலில் அவ்விரு மாணவ பிரிவினருக்கு கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM