ஆகஸ்டிலிருந்து சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்க திட்டம்

01 Jun, 2020 | 06:30 PM
image

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழுமையாக முடங்கியிருந்த நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மீளவும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறையின் ஊடாகப் பெருமளவு வருமானம் ஈட்டப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் அது முற்றாக முடங்கியது. இந்நிலையிலேயே சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை மீளவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆரம்பிக்கவிருப்பதாக கிமாலி பெர்னாண்டோ ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்குத் தகவல் வழங்கியிருக்கிறார்.

அதன்படி உயர் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, உலகலாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட சிறிய குழுக்களை முதலில் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கும், நிர்ணயிக்கப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதிகளில் முறையான பாதுகாப்பு வரையறைகளைப் பின்பற்றி அவர்களைத் தங்க அனுமதிப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக அவர் மேலும் கூறியிருக்கிறார்.

நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளை யால தேசிய பூங்கா, உடவளவை, அறுகம்பே, திருகோணமலை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவிருக்கிறது. மேலும் இம்மாத நடுப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கவிருப்பதாக வெளியான செய்திகளை அவர் மறுத்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56