மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி என்ற தலைப்பில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.
இன்று நாம் சித்திரவதை தொடர்பில் அதி அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் சித்திரவதை என்பது கடந்த பல தசாப்த காலமாக பாரிய சிக்கலாக உருவெடுத்துள்ள ஒரு காரணியாகும்.
இலங்கையில் சித்திரவதைகள் அதிகரித்துள்ளன. அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டங்களை வலுவாக்கம் செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சட்குணநாதன் தெரிவித்தார்.
அதேநேரம் சித்திரவதைகளின் துணைக்கொண்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திள் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எமது நாட்டில் கடந்த காலங்களில் காணாமல் போதல் உள்ளிட்ட விடயங்கள் குறைவடைந்துள்ளன. எமக்கு 10 பிரதேச அலுவலகங்களும் உள்ளன. அங்கும் இவ்வாறான முறைபாடுகள் பதிவாகவில்லை. கொடூரமான முறையில் பதிவாகவில்லை.ஆனால் சித்திரவதை அதிகரிக்கின்றது. விஷேடமாக பொலிஸ் தடுப்பில் உள்ளவர்கள் மீதான சித்திரவதைகள் அதிகரிக்கின்றன.
சர்வதேச மட்டத்திலும் இது பாரிய பிரச்சினையாகியுள்ளது. அதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்கு பொறுப்பு கூறவேண்டிய நிறுவனம் என்ற பொறுப்பை கொண்டுள்ளது. அதனால் சித்திரவதைகளை ஒருபோதும் நியாயப்படுத்த இடமளிக்க கூடாது என்ற அடித்தளத்திலிருந்து நாம்செயற்படுகின்றோம்.
அரசியலமைப்பிலும் அவமானம் மற்றும் சித்திரவதையிலிருந்து விடுபட்டு வாழும் சுதந்திரம் எமது நாட்டில் உள்ள சகல பிரஜைகளுக்கும் உள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் இதற்கு வரையரை விதிக்கப்படவில்லை. மோதல் ஒன்றின் போதும் இடம்பெறும் சித்திரவதைகளை கூட நியாயப்படுத்தும் உரிமை எவருக்கும் வழங்கப்படவில்லை.
விஷேடமாக 1994 ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டமொன்றுக்கமைய இலக்கம் 22 ஆம் சடத்தின் பிரகாரம் சித்திரவதைதக்கு எதிரான சர்வதேச நல்லிணக்கம் தொடர்பிலான சட்டம் இலங்கை சட்டக்கோவையிலும் உள்ளீர்க்கப்பட்டது.
இன்று முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறான சித்திரவைதகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம். இது சரளமான காரியம் அல்ல என்பது எமக்கு தெரியும் ஆனால் இது எமது கட்டாய கடமை. ஆனால் ஆணைக்குழுவின் தொழில்நுட்ப முறைமைகளை மட்டும் கொண்டு எம்மால் இதனை சாதகமாக நடைமுறைப்படுத்த முடியாது. எனவே மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியமாகும்.
தற்போது சித்திரவதைகள் கனிசமாக அதிகரித்துள்ளன. அதனால் மக்களுக்கு எம்முடன் கைகோர்த்து வன்முறைகளை புறக்கணிக்க உதவ வேண்டும். இன்று காலை ஒன்பது மணிக்கு பாடசாலை மாணவர்கள் முப்படை மற்றும் ஆணைக்குழுவினர் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஆணைக்குழுவில் அலுவலகத்திலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரையில் முன்னெடுக்க உள்ளோம் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தினத்தினையடுத்து இந்த பொதுப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கையில் சாதாரணமாக கருதப்படும் சித்திரவதை ஒரு பாரிய குற்றம் என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தவே நாம் முயற்சிக்கின்றோம். அதேநேரம் பொலிஸார் மட்டுமன்றி பொதுமக்களும் தமக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள சில சந்தர்ப்பங்களில் சித்திரவதைகளை ஆயுதமாக கையாளுகின்றனர்.அதிலிருந்து விடுபடும் வகையிலான தெளிவு படுத்தல்களும் அவசியமாகவுள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை நீண்டாலம் தொடர்வதில்லை என்ற குற்றசாட்டு உள்ளது. ஆனால் நாம் ஒரு வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று உயர் நீதி மன்றம் வழக்கை பொறுப்பேற்றதும் அதன் பின்னர் நீதிமன்ற அதிகாரத்தின் பிரகாரமமே அந்த வழக்கு தொடர்ப்பட வேண்டும் எமக்கு அதன் பின்னராக காரியங்களுக்கு அதிகாரம் இல்லை.
ஆனால் பாதிக்கப்பட்வருக்கு நஷ்டயீடு பெற்றுக்கொடுக்கவும் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனை வழங்குமாறு பணிப்பதற்குமான அதிகாரம் எம்மை சார்ந்துள்ளது. அதேநேரம் குற்ற வழக்குளின் போது சித்திரவதை மூலம் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர முயற்சிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். எனவே சித்திரவதைகள் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சந்தரப்பங்கள் நூற்றுக்கு 5 வீதமாகவே பதிவாகியுள்ளன.
அதனால் அந்த முறையை ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை. எமது நாட்டில் சித்திரவதைகள் ஊடாக பெற்றுக்கொண்ட சாட்சியை பயன்படுத்த முடியாது. அதனால் அதற்கான மாற்று முறைமைகளை கையாள பொலிஸாருக்கு பயிற்றுவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும் மனோதத்துவ ரீதியில் சாட்சியங்களை பெற முயற்சிப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM