பொன்னியின் செல்வனை ‘கைவிட்ட’ மணிரத்தினம்

Published By: Digital Desk 4

30 May, 2020 | 10:12 PM
image

‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து  இயக்கி முடிப்பதற்குள், புதிதாக ஒரு காதல் கதையை எழுதி, இயக்க இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர், உலகநாயகன் கமலஹாசன் உள்ளிட்ட பலர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கி, திரைக்கு கொண்டுவர முயற்சித்தனர். 

அவர்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம், பிரம்மாண்ட பட நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸுடன் கை கோர்த்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை உருவாக்க தீர்மானித்தார். அத்துடன் இந்த படத்தை இரண்டு பாகங்களாக படமாக்கவிருப்பதாக இயக்குனர் மணிரத்னம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் தொடங்கியது. இதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பல இந்திய திரையுலக நட்சத்திரங்கள்  நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட மணிரத்தினம் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காலவரையின்றி திரைப்பட படப்பிடிப்புகள் முடக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் காரணமாக, திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடைபெறுவதற்கான சாத்தியமில்லை என்கிறார்கள் திரையுலகினர். 

அதிலும் பிரம்மாண்டமான சரித்திரப் படத்தை இயக்கி வரும் மணிரத்தினத்தின் படக்குழு மற்றும் நடிகர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு இனி தொடர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறு மாத காலத்திற்கு மேலாகும் என்கிறார்கள்.

இந்த யதார்த்த நிலையை புரிந்து கொண்ட இயக்குனர் மணிரத்தினம், தான் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தை ‘சற்று தள்ளிவைத்துவிட்டு’, முதிர்ச்சியான, காதலர்களுக்கான காதல் கதை ஒன்றை எழுதி, இயக்க திட்டமிட்டிருக்கிறார் என்றும், இதில் அரவிந்த்சாமி கதையின் நாயகனாக நடிக்க கூடும் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 

இதற்கு இதுவரை மணிரத்னம் மறுப்பு சொல்லாததால், இந்த செய்தி உண்மை என்கிறார்கள் திரையுலகினர். ஓகே கண்மணி, செக்கச்சிவந்த வானம் என வெற்றிப்படங்களை ஆண்டுதோறும் வழங்கும் இயக்குனர் மணிரத்தினம், மீண்டும் தன்னுடைய பாணியிலான காதல் கதையை இயக்கவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அவருடைய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35