இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் தாய் நாட்டுக்கு அழைத்துச் செல்ல பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு சொந்தமான BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய இரண்டு கப்பல்கள் நேற்று (மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
குறித்த இராஜதந்திர பணிக்கு இலங்கை கடற்படை உதவி வழங்கியது.
கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள சர்வதேச விமானங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக மீன்டும் தாய் நாட்டுக்கு செல்ல முடியாமல் இலங்கையில் தங்கியிருந்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை அழைத்துச் செல்ல இந்த இரண்டு கப்பல்களும் நேற்று (2020 மே 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலிருந்து அவற்றுக்கான விநியோகத் தேவைகளை பூர்த்திச் செய்து நாட்டின் நிலைமையைப் பொறுத்து பிலிப்பைன்ஸ் கப்பல்களில் இருந்து இறங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்த தொற்றுநோய்களின் கீழ் அனைத்து நிலையான சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி அனைத்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் கப்பல்களில் பயணிப்பதற்கு முன்னர் முழுமையாக மருத்துவ சோதனைக்ககு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த இரு கப்பல்களும் இன்று 30 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM