நிந்தவூர் முதலாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் முதலாம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
எனினும் உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.
இதனால் பொதுமக்களின் உதவியை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கி ஊடாக சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து சடலத்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி பார்வையிட்டார்.
அதன் பின்னர் அதிகளவான மக்கள் பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மருமகன் இரவு அடையாளம் காட்டியிருந்தார்.
இதனடிப்படையில் நிந்தவூர் 02 இமாம் ரூமி லேன் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 57 வயது மதிக்கத்தக்க ஆதம்லெப்பை சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு சென்ற இராணுவத்தினரும் சம்மாந்துறை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM