சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அதிக விலையில் மதுபானம் விற்க முற்பட்ட முதியவர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் அதிக விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் உரும்பிராய் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது முதியவர் ஒருவர் அதிகாலையில் விவசாயிகளுக்கு 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றினை 400 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் குறித்த முதியவரிடம் அதிக விலை கொடுத்து மதுபான போத்தல் கொள்வனவு செய்துள்ளனர்.
சிவில் உடையில் சென்றவர்கள் பொலிஸார் எனத் தெரியாத நிலையில், முதியவரும் பொலிஸாருக்கு மதுபான போத்தலை விற்க முற்பட்டுள்ளார். இதனால் முதியவரைக் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து எட்டு 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM