(செ.தேன்மொழி)
வைரஸ் பரவலை தடுப்பதற்காக முகவசம் அணிதல் மற்றும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக இரண்டு நாட்களுக்குள் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இதனால் வீட்டை விட்டு வெளியேறும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும், ஒவ்வொரு நபரும் அவர்களுக்கிடையில் ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் என்றும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைய இந்த அறிவுறுத்தலுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்வதாக பொலிஸ் தலைமையகமும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணி தொடக்கம், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய கடந்த செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை இரவு 10 மணி வரை 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM