சுகாதார விதிமுறைகளை மீறிய  780 பேர் கைது

Published By: Digital Desk 3

29 May, 2020 | 02:59 PM
image

(செ.தேன்மொழி)

வைரஸ் பரவலை தடுப்பதற்காக முகவசம் அணிதல் மற்றும் நபர்களுக்கிடையிலான இடைவெளியை பேணுதல் என்பன கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக இரண்டு நாட்களுக்குள் 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதனால் வீட்டை விட்டு வெளியேறும் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்றும், ஒவ்வொரு நபரும் அவர்களுக்கிடையில் ஒரு மீட்டர் இடைவெளியை பேண வேண்டும் என்றும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அதற்கமைய இந்த அறிவுறுத்தலுக்கு புறம்பாக செயற்படும் நபர்களை கைது செய்வதாக பொலிஸ் தலைமையகமும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணி தொடக்கம், இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த செவ்வாய்கிழமை முதல் வியாழக்கிழமை இரவு 10 மணி வரை 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02