(இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அக்கறை கிடையாது. தேர்தலை பிற்போடும் எதிர்தரப்பினரது நோக்கத்துக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையாளர் செயற்படுகின்றார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றஞ்சாட்டினார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்கள் தங்களது சேவைக்கு அப்பாற் சென்று ஒத்துழைப்பு வழங்கின.
பொதுத்தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. பொதுத்தேர்தலை ஜூன் 20 ம் திகதி நடத்த முடியும் என குறிப்பிட்ட போது தேர்தல் ஆணையாளர் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை கூட முன்னெடுக்கவில்லை.
பொதுத்தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கம் தேர்தல் ஆணைக்குவுக்கு கிடையாது. தேர்தலை பிற்போட எதிர்தரப்பினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே ஆணைக்குழு செயற்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வைரஸ் சமூக தோற்றாக பரவலடையவில்லை.ஆகவே தேர்தல் ஆணைக்குழு சுகாதார தரப்பினரது பரிந்துரைக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM