23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் சேமிக்­கப்­பட்ட தந்­தையின் விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி பிறந்த குழந்தை

Published By: Robert

08 Dec, 2015 | 11:12 AM
image

புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் பேணப்­பட்ட தனது விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்­றுக்கு தந்­தை­யான அதி­சய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பிறிஸ்பேன் நகரில் இடம்­பெற்­றுள்­ளது.

இது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்தக் குழந்­தை­யா­னது உலகின் மிகவும் பழை­மை­யான குழந்­தை­யாக விளங்­கு­கி­றது.

அலெக்ஸ் போவெல் என்ற மேற்­படி நப­ருக்கு அவ­ரது 15 ஆவது வயதில் புற்­றுநோய் ஏற்­பட்­டி­ருப்­பது அடை­யாளம் காணப்­பட்­டது.

இதனால் அவ­ருக்கு இர­சா­யன சிகிச்­சைக்கு உட்­பட வேண்­டிய கட்­டாய நிலை ஏற்­பட்­டது.

இந்த சிகிச்­சையால் ஏற்­படும் பக்க விளை­வு­களால் அலெக்ஸின் விந்­த­ணுக்­களின் உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு அவர் எதிர்­கா­லத்தில் திரு­மணம் செய்யும் பட்­சத்தில் குழந்தை பாக்­கி­ய­மற்ற நிலைக்கு உள்­ளாக நேரிடும் என்­பதை உணர்ந்த அவ­ரது மாற்றான் தாயா­ரான பற்­றீ­சியா போவெல், அலெக்ஸின் விந்­த­ணுக்­களை உறை நிலையில் பேண நட­வ­டிக்கை எடுத்தார்.

அவ­ரது இந்த முன்­னெச்­ச­ரிக்­கை­யான செயற்­பாட்டின் கார­ண­மா­கவே மேற்­படி உலகின் பழை­மை­யான குழந்தை பிறப்­பது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

அலெக்ஸ் போவெல் இர­சா­யன சிகிச்­சைக்கு முதன் முத­லாக உட்­ப­டுத்­தப்­பட்ட போது அவ­ரது வயது 18 ஆகும் மேற்­படி சிகிச்­சைக்கு முன் அவ­ரது விந்­த­ணுக்­களை சேமிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து சுமார் 20 வரு­டங்கள் கழித்து 'வி' என சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் பெண்ணை சந்­தித்து காதல் கொண்டு திரு­மண பந்­தத்தில் இணைந்த அலெக்ஸ் போவெல், 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

பிறந்த குழந்தைக்கு சேவியர் போவெல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right