தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பாராளுமன்ற தேர்தல் 2020 அரசியல் வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தல் எனும் தலைப்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஆளுநர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக செயற்படும் எம். அஸாத் எஸ். சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய் பாதுகாப்பு கடந்த 2019.11.30 ஆம் திகதியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் ஆளுநர்களுக்கு தற்போதும் மெய் பாதுகாப்பாளர்கள் வழங்கப்படுகின்றன நிலையில், முன்னாள் ஆளுநர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான எம்.அஸாத் எஸ். சாலிக்குரிய மெய் பாதுகாப்பாளர்கள் நீக்கியமை உசிதமான காரியமல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
அதனால் எம்.அஸாத் எஸ். சாலிக்கு மீண்டும் போதுமான மெய் பாதுகாப்பு அதிகாரிகளை வழங்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாது எனின் அது தொடர்பான காரணங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அனுப்பி தேர்தல்கள் ஆணைக்குழுவை அறிவுறுத்த வேண்டும்.
அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் எம்.அஸாத் எஸ். சாலிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM