(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
நேற்று செவ்வாய்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளானோர் 137 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 10 பேர் கடற்படையினராவர். 127 பேர் குவைத்திலிருந்து வருகை தந்தவர்களாவர்.
குவைத்திலிருந்து வருகை தந்தவர்களின் பி.சி.ஆர். பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் வருகை தரவுள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களில் நோயாளர்களாக இனங்காணப்படுபவர்களின் சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் அம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை என்பன தயார்படுத்தப்பட்டுள்ளன.
கடற்படையினரில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. கடற்படையினர் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 5000 பேர் வரையில் பல்வேறு நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 3000 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவு செய்து சாதாரண நிலைமையை அடைந்துள்ளனர்.
சுகாதார ஆலோசனைகள் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணைதளத்திலும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன. அதனை அனைவருக்கும் பார்வையிட முடியும். அதற்கமைய பொது இடங்கள் மற்றும் ஏனைய இடங்களில் செயற்பட வேண்டும்.
அத்தோடு மக்கள் ஒன்று கூடும் வகையில் ஏதேனும் வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவதானால் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM