உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்றுநரும் முன்னாள் தலைவரும் மிஸ்பா உல்-ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 அணிகள் பங்கேற்கும் உலக இருபதுக்கு 20 தொடர் அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க செப்டம்பர் மாதம் வரை அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருப்பதால், இத்தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவ்வாறு இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அதன்போது ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாளைய தினம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. நிர்வாகிகள் கூட்டத்தில் உலக இருபதுக்கு 20 தொடர் திட்டமிட்டபடி நடத்தலாமா? அல்லது ஒத்திவைக்கலாமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மிஸ்பா உல்-ஹக் இணையத்தளமொன்றுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது,
“16 அணிகள் பங்கேற்கும் உலக இருபதுக்கு 20 தொடருக்கான ஏற்பாடுகளை செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த போட்டி குறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு மாதமோ அல்லது அதற்கு மேலாகவோ பொறுத்து இருந்து பார்த்து எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. இத்தொடரை பார்பதற்கு எல்லோரும் விரும்புகிறார்கள். சர்வதேச அளவிலான போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கும்போது கிரிக்கெட்டை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கு இத்தொடர் சிறப்பான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM