மலையகத்தின் மூத்த அரசியல்வாதியும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று கொழும்பில் காலமானார்.
இச்செய்தி நாட்டில் மிகுந்த சோகத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .
அமரர் தொண்டமானின் மறைவையொட்டி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட மலையக அரசியல் தலைவர்கள் பலரும்தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர்.
நேற்று மாலை கொழும்பில் இலங்கைக்கான இந்திய, புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துவிட்டு பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பிய போது திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் அவர் காலமானார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி நான்காம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த ஆறுமுகன் தொண்டமான், மலையகத்தின் ஆளுமை மிக்க தலைவராக விளங்கிய சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரானார்.
1990 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறுமுகம் தொண்டமான், முதல் தடவையாக 1994 ஆம் ஆண்டு தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 74 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றார்.
பல அமைச்சுப் பதவிகளை வகித்த அவர் மலையக மக்களுக்காக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார் .அவரது இழப்பு மலையகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் துணிந்து குரல் கொடுத்து வந்தது மாத்திரமன்றி, அவர்களுக்கு ஓர் பாதுகாவலனாகவும் ஆறுமுகன் தொண்டமான் விளங்கினார் என்றால் மிகையாகாது.
ஓர் சிறந்த முன்மாதிரியான தலைவனை இன்று மலையகம் இழந்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது . அரசியல் பேதங்களுக்கு அப்பால் அவரது இழப்பை அறிந்து மலையகத் தலைவர் கள் அனைவரும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைசெலுத்தி வருகின்றனர்.
அவரது இழப்பு ஒருவகையில் முழு நாட்டையுமே பேதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த துயரில் நாமும் பங்கு கொள்வோமாக.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM