மலையக மக்களினதும் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்துவந்த தலைவரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். எந்த சந்தர்ப்பத்திலும் நேர்மையாகவும் வெளிப்படைதன்மையுடன் நடந்து கொள்ளும் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பிற்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது ,
அவரது பட்டானாராகிய சௌமிய மூர்த்தி தொண்டமானுடைய வழிகாட்டலில் அரசியலில் பிரவேசித்த இவர் நீண்ட காலமாக சமூதாயத்திற்காக பாடுபட்டவராவார்.
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் விவகாரத்தை நேரடியாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு அதனைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியையும் இடைவிடாது முன்னெடுத்திருந்தார்.
அது மாத்திரமின்றி 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது மலையக இளைஞர் யுவதிகளுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறார்.
எனவே ஆறுமுகன் தொண்டமான் போன்றதொரு தலைவரின் இழப்பு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM