முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்று (26-05-2020) இரவு ஏழு மணி அளவில் காட்டு யானையின் தாக்கத்திற்கு உள்ளாகிய வயோதிபர் தற்போது மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டுசுட்டான் வித்தியாபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நாகலிங்கம் முத்துலிங்கம் என்பவர் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 14 ஆம் கட்டை பகுதியில் மாலை 7.00 மணியளவில் காட்டுயானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே விபத்தில் காயமடைந்த முறிந்த நிலையில் இருந்த காலில் யானை தாக்கியதால் கால் முடிவடைந்த நிலையில் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய துவிச்சக்கர வண்டியையும் யானை தாக்கி சேதம் ஆற்றியுள்ளது.
யானை தாக்கியதை தொடர்ந்து அவர் எழுப்பிய குரலில் அயல் கிராமத்தவர்கள் வருகைதந்து உடனடியாக 1990க்கு அழைப்பை எடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் அவர் மாங்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது அவர் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM