உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பிரேசில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு 3 இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றாளர்கள் உள்ளதாகவும் 22 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் கூறுகிறது.
இந்த நிலையில் பிரேசில் நாட்டில் இருந்து வருகிறவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு வெள்ளை மாளிகை அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதையொட்டி வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில்,
“வெளிநாட்டினரின் நுழைவை தடுத்து நிறுத்துவதின் மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க ஜனாதிபதி தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அதன்படி பிரேசிலில் சமீபத்தில் 14 நாட்கள் இருந்த வெளிநாட்டினர் அமெரிக்கா செல்ல பயண தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
குறித்த இத்தடை உத்தரவு 28 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM