அவதானம் ! பரீட்சை கால அட்டவணை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் போலித் தகவல்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

Published By: Digital Desk 3

25 May, 2020 | 07:06 PM
image

(நா.தனுஜா)

இவ்வருடம் க.பொ.த  உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் திகதி உள்ளிட்ட கால அட்டவணை தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையெனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்திருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் உயர்தரப் பரீட்சை கால அட்டவணையொன்று பகிரப்பட்டுவரும் நிலையிலேயே கல்வியமைச்சு இதுகுறித்த தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இம்முறை உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகும் திகதி உள்ளிட்ட கால அட்டவணையொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

எனவே உயர்தரப்பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவித்தல்களை மாத்திரம் கருத்திற்கொண்டு பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாடு நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் கல்வி சார்ந்த விடயங்களில் தூரநோக்குடனேயே தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவ்வாறிருக்கையில் சமூகவலைத்தளங்களின் ஊடாக இத்தகைய பொய்யான செய்திகள் பரப்பப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51