(இராஜதுரை ஹஷான் )
தேர்தல் ஆணைக்குழுவில் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தற்போது பொதுத்தேர்தலை நடத்துவது குறித்தே மக்கள் அவதானம் செலுத்துகிறார்கள். இதற்கன நடவடிக்கை யினை தேர்தல் ஆணைக்குழு முறையாக முன்னெடுக்க வேண்டும்.
தேர்தல் ஆணைக்குழுவில் முரண்பாடுகள் தீவிரமடைந்ததுள்ளன. சுயாதீன ஆணைக்குவின் உறுப்பினர்களது செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமாக காணப்படுவதுடன், சந்தேகத்தினை தோற்றுவிப்பதாகவும் உள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்னஜீவன் ஹூல் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியுள்ளார்.
தேர்தல் ஆணைக்குவின் உறுப்பினர்கள் மாத்திரமே ஆணைக்குழுவின் வரப்பிரசாதங்களை பயன்படுத்த முடியும் தவிர அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆணைக்குழுவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவருக்கு எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பொதுத்தேர்தலின் ஊடாக பலமான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். தேர்தல் ஆணைக்குழு தற்போதைய நிலையில் சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தீர்மானங்களை எடுப்பதே சிறந்ததாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM