(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக இதுவரையில் 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 169 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நாடு பூராகவும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு மீள் அறிவிக்கும் வரை அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்பட்டுள்ளதுடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் இன்று திங்கட்கிழமை காலை ஆறு மணிவரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 1710 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், இவர்களிடமிருந்து 557 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு இருமாதங்களும் ஐந்து நாட்களும் கடந்துள்ள நிலையில், ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 18 ஆயிரத்து 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக 20 ஆயிரத்து 497 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 7934 பேருக்கு எதிராக தன்டணையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM