போக்குவரத்துச் சபையை திறைசேரிக்குப் பணம் அனுப்பும் நிறுவனமாக மாற்ற வேண்டும் - ஜனாதிபதி

Published By: Digital Desk 4

24 May, 2020 | 05:09 PM
image

(இரா.செல்வராஜா)

திறைசேரியில் இருந்து மானியம் பெறாமல் திறைச்சேரிக்குப் பணம் அனுப்பும் நிறுவனமாக போக்குவரத்துச்சபையை மாற்றியமைக்க வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சபை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த வேண்டுகொளை விடுத்தார்.

இந்தக் கலந்துரையடலில் மத்திய போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க பிரதம நிறைவேற்று அதிகாரி சாகரஹேமந்த வடுகே, பணிப்பாளர் நாயகம் அத்துலகுமார உட்பட பணிப்பாளர் சபையினரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரரையாடலின் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்ததாவது,

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் போக்குவரத்துச்சபை இயங்க வேண்டும்.

போக்குவரத்துசபையில் சுமார் 4,500 க்கு மேற்பட்டவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, போக்குவரத்துச் சேவையை திறம்பட நடத்த வேண்டும். திறைசேரியில் இருந்து பணம் பெறும் நிறுவனமாக போக்குவரத்துச்சபை இருக்கக் கூடாது. இச்சபையை திறைசேரிக்கு பணம் அனும்பும் நிறுவனமாக மாற்ற வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் பஸ்களுக்கு மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூச வேண்டும். பாடசாலை பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடும் போது பொலிசாரினால் முன்னுரிமை வழங்கக் கூடியதாக இருக்கும். போக்குவரத்து சபையில் ஊழல், திருட்டு,இ மோசடி ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48