(இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாப்பதற்கு செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நோய் தாக்கத்தை எதிர்க் கொள்ளத்தற்கான உரிய வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ வேண்டிய நிலையே காணப்படுகின்றது. தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.
பொதுத்தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது காணப்படுகின்றது. கொரோனா வைரஸை முழுமையாக ஒழித்த பின்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுவது தவறான கருத்தாகும்.
தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாத்திரம் தேர்தல் ஆணைக்கு முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM