யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்...
தற்போது நிலவி வருகின்ற அம்பான் புயல் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதனுடைய தாக்கம் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்திலும் காற்றின் தாக்கமானது கடந்த 24 மணி நேரத்திற்குள் உயர்வானதாக உணரப்பட்டுள்ளது.
நேற்று வீசிய காற்றின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்த 73 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கைதடி பகுதியில் பாடசாலை ஒன்றும் சேதமடைந்துள்ளது. மேலும் மயிலிட்டி பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒரு பெண் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கரை சேர்ந்துள்ளார்.
இந்த காலநிலையானது எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு எதிர்பார்ப்பதால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறுவுறுத்தப்பட்டுள்ளது.
நிலப்பகுதியில் காணப்படுகின்ற காற்றின் தாக்கத்தினை விட கடற்கரையை அண்டிய பகுதியில் காற்றின் வேகம் கூடுதலாக காணப்படுவதனால் குறிப்பாக கரையோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM