சிங்கர் ஃபினான்ஸ் (லங்கா) பி.எல்.சி. அதன் சமீபத்திய பட்டியலிடப்பட்ட, மதிப்பிடப்பட்ட, பாதுகாப்பற்ற, மூத்த, மீட்டுக் கொள்ளக்கூடிய மூன்று ஆண்டு மற்றும் ஐந்தாண்டு, முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான நம்பிக்கை வாக்குகளைப் பெற்றது.
இதன் மூலம் ஒரு பில்லியன் கடன் பத்திர வெளியீடு அதிக சந்தா வழங்கப்பட்டது. சந்தாவானது 2020 மே 13 புதன்கிழமை முடிவடைந்தது. இந்த கடன் பத்திரம் BBB (lka) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இதனை Fitch Ratings Lanka Limited இனால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கர் பினான்ஸ் என்பது நாடு முழுவதும் பரவியிருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட சொத்து இலாக்காவைக் கொண்ட ஒரு நெகிழக்கூடிய மற்றும் நம்பகமான நிதி நிறுவனம் என்பதுடன், மேலும் இது 75% சிங்கர் (ஸ்ரீலங்கா) பி.எல்.சி.க்கு சொந்தமான துணை நிறுவனமாகும்.
அத்துடன் இலங்கையின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான ஹேலிஸ் பி.எல்.சி.க்கு சொந்தமானது. இந்த கடன் பத்திர சந்தா வெற்றியானது முதலீட்டாளர்களினால் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.
மூலதனப் பொருட்கள், வாகனங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் நிலையான வைப்புக்களைத் திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு முழு சேவை நிதி நிறுவனமாக 2004இல் நிறுவப்பட்ட சிங்கர் ஃபினான்ஸ் நாடு முழுவதிலும் 35 கிளைகளைக் கொண்டுள்ளது.
Fitch Ratings நிறுவனம் நிலையான கண்ணோட்டத்துடன் BBB (lka) என மதிப்பிட்டுள்ளது, மேலும் இலங்கையில் பணிபுரியும் சிறந்த 25 இடங்களில் ஒன்றாகவும் இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM