மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை ஆபத்தில்லாத பிரதேசங்களில் ஆரம்பம் - மகிந்த அமரவீர

Published By: J.G.Stephan

20 May, 2020 | 07:37 PM
image

கொரோனா பரவல் காரணமாக, கடந்த  இரு மாதங்களாக நாடெங்கும் அசாதாரண சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில்  மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், வேலைக்கு செல்லும் அரச-தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியம் அற்ற தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது. நிலைமை சீரடையும் பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச-தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44