கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரு மாதங்களாக நாடெங்கும் அசாதாரண சூழ்நிலையே நிலவி வருகிறது.
இந்நிலையில், ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், வேலைக்கு செல்லும் அரச-தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் அற்ற தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது. நிலைமை சீரடையும் பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச-தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM