கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த ரஷ்ய பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கடமைக்கு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமையால், பணியில் இருந்து தற்காலிமாக ஒதுங்கி இருக்கப் போவதாக பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் அறிவித்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ், பிரதமரின் பணிகளை தற்காலிகமாக மேற்கொண்டுவந்தார்.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 308,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்புக்குள்ளான நாடாக ரஷ்யா உள்ளது. கொரோனா பதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதலாவதாக உள்ளது.
அதேவேளை ரஷ்யாவில் கொரேனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,972 ஆக இருப்பதோடு,85,392 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
பெரும்பான்மையான நோய்த்தொற்றுகள் ரஷ்ய தலைநகரில் மையப்படுத்தப்படுத்தியே இனங்காணப்படுகின்றது. இதனால் மே இறுதி வரை ரஷ்யா பூட்டுதலை நீட்டித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு கடைகளுக்கும் செல்லப்பிராணிகளான நாய்களை வெளியில் அழைத்து செல்லவும் அல்லது அத்தியாவசிய வேலைகளுக்கு அனுமதிப்பத்திரத்துடன் பயணிக்கவும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM