சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தற்போது 49 இலட்சத்தையும் கடந்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
அதன்படி 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 4,900,253 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அதனால் 323,345 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 1,689,377 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுள்:
- அமெரிக்கா: 1,528,566
- ரஷ்யா: 299,941
- பிரேஸில்: 271,885
- பிரிட்டன்: 250,138
- ஸ்பெய்ன்: 232,037
- இத்தாலி: 226,699
- பிரான்ஸ்: 180,933
- ஜேர்மன்: 177,778
- துருக்கி: 151,615
- ஈரான்: 124,603
- இந்தியா: 106,886
- பேரு: 99,483
- சீனா: 84,063
- கனடா: 80,498
- சவுதி அரேபியா: 59,854
- பெல்ஜியம்: 55,791
- மெக்ஸிகோ: 54,346
கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்:
- அமெரிக்கா: 91,921
- பிரிட்டன்: 35,422
- இத்தாலி: 32,169
- பிரான்ஸ்: 28,025
- ஸ்பெய்ன்: 27,778
- பிரேஸில்: 17,983
- பெல்ஜியம்: 9,108
- ஜேர்மன்: 8,081
- ஈரான்: 7,119
- கனடா: 6,028
- நெதர்லாந்து: 5,734
- மெக்ஸிகோ: 5,666
- சீனா: 4,638
- துருக்கி: 4,199
- சுவீடன்: 3,743
- இந்தியா: 3,303
- பேரு: 2,914
- எகுவாடோர்: 2,839
- ரஷ்யா: 2,837
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,611 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் ஆரம்பமானதிலிருந்து ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும் என்று அந் நாட்டு சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் 10,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது 106,886 கொரோனா தொற்றாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3,303 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் 42,309 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு 37,136 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,325 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் இதுவரை 2.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்று சோதனைகளை நாடு முழுவதும் நடத்தியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜப்பான்
ஜப்பானில் செவ்வாய்க்கிழமை 31 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உட்டு உயிரிழப்புகளும் பதிவாகியுளள்ளன.
இதன் மூலம் ஜப்பானின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 16,925 ஆகவும் உயிரிழப்பானது 784 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை தொடர்ச்சியாக 10 ஆவது நாளாகவும் 30 க்கும் குறைவான புதிய கொரோனா தொற்றாளர்கள் ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி கடந்த ஒரு மாதத்தில் படிப்படியாக ஜப்பானில் புதிய கொரோனா தொற்றாளர்கள் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
சில வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நாளாந்தம் 100 - 300 வரையான புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
அமெரிக்கா
அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை 20,260 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 1,574 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் மொத்தமாக 1,528,566 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி 91,921 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.
சீனா
சீனாவில் நேற்றைய தினம் புதிய கொரோனா தொற்றாளர்களாக ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் ஆவார். மற்றைய அனைவரும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள், வடகிழக்கு மாகாணமான ஜிலினில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சீனாவில் மொத்தமாக 84,063 கொரோன தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 4,638 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் 79,310 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM