ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்யும் பிரதான முகவரான பெண்ணொருவரை மொனராகலைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மொனராகலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து கொழும்பிலிருந்து மொனராகலைக்கு சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றை கும்புக்கன் என்ற இடத்தில் வழி மறித்து சோதனையிடுகையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப் பெண்ணின் கைப்பையிலிருந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நூறு பக்கெட்டுக்களைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளயும் பொலிசார் மீட்டுள்ளனர்.
இப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நீண்டகாலமாகவிருந்தே இப்பெண் கொழும்பிலிருந்து ஹெரோயின் போதைப்பொருட்களை மொனராகலைக்கு எடுத்துவரும் பிரதான முகவராக இப்பெண் செயற்பட்டமையும் தெரியவந்துள்ளது.
இப் பெண் விசாரணையின் பின்னர் மொனராகலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM