யெமன் நாட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் இராணுவ முகாமில் நேற்று மாலை இராணுவ வீரர்கள் நோன்பு திறக்க காத்திருந்த வேளையில், அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் ‘சாப்பிடுவதற்கு ஏதாவது? கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளான்.
இராணுவ வீரர்கள் பதில் அளிப்பதற்குள் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை அந்த வழிப்போக்கன் வெடிக்கச் செய்துள்ளார். இதேபோல், இராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று மாலை முகால்லா நகரின் வேறுசில பகுதிகளில் மேலும் நான்கு பேர் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் 40 இராணுவ வீரர்கள் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னர், அல்-கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முகால்லா நகரை கடந்த ஏப்ரல் மாதம் அரசுப்படைகள் மீட்டதாக அறிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM