5 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த கிராம உத்தியோகத்தர் பணி நீக்கம்!

18 May, 2020 | 04:58 PM
image

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஆறு நபர்களின் போலிப்பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சேவை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து ஆரம்ப விசாரணைக்காக மூவர் கொண்ட குழு அவரால் நியமிக்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரனை மற்றும் ஆரம்ப விசாரனை அறிக்கைக்கேற்ப குறித்த உத்தியோகத்தரின் சேவையை மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபர் தேசிய அடையாள அட்டை வழங்கும் நடைமுறையின்போது அறவிடுகின்ற 30000ரூபாவை பிரதேச செயலகத்திற்கு வழங்காமல்  மோசடி செய்தமை தொடர்பில் இவ்விசாரணையில் வெளிவந்நத்தாகவும் இது தொடர்பிலான பூரண அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றதும் உரிய மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43