(எம்.மனோசித்ரா)
நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கும் பலமான பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும். எனவே சுகாதார அமைச்சினால் நாட்டின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்பட்டவுடன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொரோனா வைரஸ் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட முப்படையினரின் செயற்பாடுகள் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் என்பவற்றின் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தல் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் எதிர்க்கட்சியினரால் இது தொடர்பில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் காலம் என்பதாலேயே அரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியுடன் மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளது. வெகு விரைவில் மக்கள் விடுதலை முன்னணி மக்களாலேயே இல்லாமலாக்கப்படும்.
கடந்த நவம்பர் மாதம் 69 இலட்சம் மக்கள் வாக்குகளை வழங்கி அவர்களால் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆணை நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழு விரைவில் சிறந்தவொரு தீர்மானத்தை அறிவிக்க வேண்டும்.
கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சினால் ஆலோசனை அறிக்கை வழங்கப்பட்டவுடன் அதன் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். காரணம் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கும் பலமான பாராளுமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM