முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க முயற்சி

Published By: J.G.Stephan

17 May, 2020 | 09:27 AM
image

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு அண்மையாக பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நினைவு தூபிக்கு அண்மையாகவுள்ள வீடு ஒன்றில் 10 க்கும் மேற்பட்ட அரச புலனாய்வவாளர்களும் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

கடந்த இரண்டு நாட்களாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு செல்லும் ஒழுங்கையில் ஆரம்பத்தில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான பாதையில் பொலிஸ் வீதி சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு அண்மையாகவுள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் புலனாய்வாளர்கள் தங்கியிருந்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.





முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு வருபவர்களை கண்காணிப்பது புகைப்படம் எடுப்பது அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு பணிப்பது போன்ற வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் முள்ளிவாய்க்கால் கிராமம் ஆரம்பிக்கும் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் படையினரின் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு வீதியால் செல்பவர்களை பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் .

அத்தோடு வட்டுவாகல் பாலத்துக்கு  முன்பாக வழமைக்கு மாறாக அளவுக்கதிகமான படையினர்  நிறுத்தப்பட்டு சோதனை சாவடி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

மே 18 அன்று தமிழின பேரவலத்தை நினைவேந்தும் வகையில் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் கொரோனா  சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ள நிலையில் அரசின் நடவடிக்கைகள் இவ்வாறு அமைந்துள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33